Monday, April 18, 2005

ஒரு மேசையில் மீந்திருந்த பெண்ணின் இதயம்!

என்னோடு பணிபுரிந்து பிரிந்த, ஒரு மலாய் இனப்பெண்ணின் மேசையை தற்செயலாக பார்த்தபோது கிடைத்த ஒரு மனப்பதிவு....

Image hosted by Photobucket.com

அவள்
பதிலற்ற சிந்தனைகளுக்குள்
தனித்திருப்பவளாகவும்
மெளனித்திருப்பவளாகவும் தோன்றுகிறாள்...


அவள்
ஆசைகளாலும் அச்சத்தாலும்
மெல்ல அடித்துச் செல்லப்படுபவளாய்
இருக்கிறாள்....


மெல்லிய சிறகுகளை விரித்து
கனவுகளின் நிழல்களைச் சுமந்தபடி
பறக்கும் அவள்...
முறிபடும்போது -
ஒரு துளிநீரை கடலுக்குத்தருபவளாய்
தெரிகிறாள்.


ஓவென்று கொட்டும் மழையாய்
சோகக்கண்ணீர்
அவளின் எண்ணங்களை
கழுவிச் செல்கிறது.
கொத்தான ஒளிக்கற்றை
அலைகளோடு இசைந்து வடிகிறது.


அதோ...
அங்கொருவன்
தனித்துமிருக்கிறான்...
மெளனித்துமிருக்கிறான்!



3 comments:

Anonymous said...

So are you the one Charu mentioned in one of his pages ?????

gotcha..............

பாலு மணிமாறன் said...

??????

Anonymous said...

வித்தியாசமான கவிதை.