Thursday, November 03, 2005

கோடுகள்

ஏதுமற்ற காகிதத்தில் இடும்கோடு
வெற்றைப் பிரிக்கும்
மேலென, கீழென.

தொட வேண்டிய
கோடுகளை நோக்கி ஓடும்
மனித புள்ளிகள்.

விதிக்கோட்டில் நடக்கும்
சாதாரணம்.
தானிடும் கோட்டில்
விதி கூட்டிச்செல்லும் உதாரணம்.

அழிவதில்லை சில கோடுகள்.
மேலும் கீழும் மாறி
தம்மை தற்காக்கும்.
நீளும்.

படி கூட
கோட்டின் குறியீடுதான்.
தாண்டக்கூடாது சீதை.
பத்தினிகளும் அப்படியே!

1 comment:

J S Gnanasekar said...

"படி கூட
கோட்டின் குறியீடுதான்.
தாண்டக்கூடாது சீதை.
பத்தினிகளும் அப்படியே!"

கோடுபோட்டு நிற்கச் சொன்னால் சீதை நிற்கவில்லையே
சீதை அன்று நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே
-அவள் ஒரு தொடர்கதை

-ஞானசேகர்