Monday, February 27, 2006

ஒப்பிடல் மனசு


தூசற்ற விரைவுச்சாலைகளை
விழிநோக்கும் வேளையில் ஏன்
உன் அழகிய கால்களின்
வழுகிய தடங்கள்
அலையுது நெஞ்சில்?

ஒடித்த சோளத்தை
உன் உள்ளங்கைகளில்
நசிய நசுக்கியதும்...
பச்சைப்பால் மணம்போவதற்குள்
புசிக்குமாறு சிணுங்கியதும்...
எழுவதேனோ நினைவுகளில்?

கே.எ·சி கோழியை
குத்தியோ பிளந்தோ
தீவிரமாக தின்று தீர்க்கையில்
எதற்கு இந்த ஞாபகங்கள்?

No comments: