ஜெயகாந்தன், புதுமைப்பித்தன்
கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன்
சுஜாதா, பாலகுமாரன்
இன்னும் எவர் எவரோ
நூலக அடுக்குகளில் வரிசையாக
எத்தனையோ நாளாய்
என்னோடு பேச....
மன்னிக்கவும்.
ஒன்பது மணிக்கு நூலக அடைப்பு.
ஒரு மணி நேர இண்டர்னெட்டில்
பிரான்ஸ் தேசத்துப் பெண்ணோடு
பில் கிளிண்டன் பற்றிப்பேச
இன்னும் இருப்பதோ இருபதே நிமிடம்!
எங்கே போய்விடும் இலக்கியம்?
பேசலாமே பின்னொருநாள்!
4 comments:
Good one...
Thankyou Poorna
அருமை யதார்த்தம் பாலு
Nandri Priyan !!!
Post a Comment