Friday, February 10, 2006

வெற்று வெளி

நேற்று மரத்தடியில்
நிழல் மட்டுமே
நின்றது

அம்மர நிழலில்

நீயும் ஓர்நாள்
நின்றிருந்ததாய்
ஒரு கவிதை

ராஜகுமாரக் கனவுகளில்
மெல்ல நீ அழிந்தததாயும்
ஒரு கவிதை

இரண்டு கவிதையிலும்
எழுதியவன் பெயரில்லை

இருந்ததே தெரியாது
அழிந்ததை அறிவேனா?

இன்றும்
அம்மரத்தடியில்
நிற்கிறது நிழல் மட்டும்!

2 comments:

Anonymous said...

Nice

பாலு மணிமாறன் said...

அவள் ஒரு கற்பனை. அவள் ஒரு கனவு. இது அவளால் வந்தது - அவளுக்காக எழுதப்பட்டது!!!