சில நிமிடங்களுக்கு ஒருமுறை
வந்துபோகும்
ரெயிலென
வந்துபோகும் உன் நினைவுகள்....
ஒவ்வொரு முறையும்
நீ இறங்கிக் கொள்கிறாய்
நான் ஏறிக்கொள்கிறேன்.
உட்கார்ந்தோ, நின்றோ...
கர்ப்பிணிப் பெண் அல்லது
முதியோருக்கு இடம் தந்தோ...
சமமாக சாலைகளில் ஓடி
ஏதாவது நிறுத்தத்தில்
தேங்கிப்போகும் வாகனங்களை
பார்வையால் பிசைந்தபடியோ...
அப்பயணம் நிகழ்ந்து விடுகிறது.
இன்னும் சிறிது நேரத்தில்
ஏதேனும் ஆங்கிலக் குரலில்
வந்துவிடலாம்
நானிறங்கும் 'அடுத்த நிறுத்தம்'.
இம்முறை
வழக்கம் போல்
நீ இறங்கிக்கொள்வாய்
வழக்கம் மாறி
நானும் இறங்கிக் கொள்வேன்...
போகும் ரெயிலின்
மூடிய கதவுகளுக்குப்பின்
போகும் நம்மை பார்த்தபடி
நடந்து போகலாம் நாம்!
ஞாபத்தில் ஒட்டுவதில்வெயிலை வென்று விடுகிறதுமழை.எத்தனையோமழை ஞாபகங்கள்...வெயில் ஞாபகங்கள்வெகு சிலவே.இன்று மழை நாள்.நீர் விரல்கள்ஞாபகம் கிளறியது.புத்தகப்பை தோள்வலிக்கநீர் தொட்டுப் பார்த்திருந்தபள்ளிகால மழை...குடைகீழ் நான் நடக்கஓரளவு நனைந்தபடிவார்த்தைகளோடுஉடன் நடந்த தந்தை...எதிரெதிர் நிறுத்தங்களில்நானும் அவளும்.மழையிடம் மட்டும்காதலைச் சொல்லியபடிநான்...அடந்த ரத்தம் மெலிந்து பரவதெருவோர மழையில்பிணமாய்ப் போனயார் பெற்ற மகனோ...ஞாபத்தில் ஒட்டுவதில்வெயிலை வென்று விடுகிறதுமழை.குடை மறந்த என்னைஜன்னல் -மழை பார் என்றது.நனைவதென முடிவு.அப்புறம் எதற்குக் குடை?இந்த மழையில்நடைபாதைப் புற்களேமுளைக்காத போதுமுளைக்கவா முடியும் நான்?நனைவதே நல்லது...முளைக்கலாம்சில நினைவுகள்!
எல்லோரும்
எதிரியாவதும்
எதிர் வருவதெல்லாம்
அன்பாவதும்
கனக்கும் சிறுகற்கள்
கன மலையில்
காற்றாவதும்
முறிந்த சிறகாவதும்
நானே சிறகாவதும்
நேற்று நானானதும்
இன்று வேறானதும்
வேறெது நிகழ்த்தும்
வேர்பிடிக்கும் காதலன்றி?
அல்ல அவளென் காதலி...
என் நாளையின் நம்பிக்கை!