Tuesday, February 28, 2006

சங்கிலிப்பதிவில் நான்

இந்தத் தொடரில் என்னையும் மாட்டி விட்ட devற்கு கோடானகோடி நமஸ்காரங்களுடன் நான் சொல்வதெல்லாம் கீழே இருக்கிறது ..........

Four jobs I have had:

1. சின்ன வயதில், கூளையனூர் ஊர்த் திருவிழா சமயம் தோட்டதில் இருந்து வாழைத் தாரை வெட்டி வந்து கடமையே கண்ணாக வாழைப்பழம் விற்றது.

2. டிப்ளோமா முடித்து பொலிகாளை மாதிரி ஊர் சுற்றிக் கொண்டிருந்த காலத்தில், ஒரு காலையில், கம்பம் மாமாவின் ரி·பிரிஜிரேஷன் கடையில் உட்கார்ந்து கதைத்துக் கொண்டிருந்தபோது, "உன்னால் சொந்தத் தொழில் செய்ய முடியாது" என்று அவர் சவால் விட, அன்று இரவே மதுரையில் இருந்து வாங்கி வந்த stationaries கொண்டு, அவர் தந்த இடத்தில் கடை போட்டு லாபம் பார்த்தது.

3. சுயமாக வேலை தேடி சென்னை வந்தபோது carewell homes என்ற கம்பெனியில், என்னென்னவோ வேலையெல்லாம் பார்த்தது.(கேபிள் டிவி புதிதாக வந்த காலம் அது. kadar Nawaz Khan ரோட்டிலிருந்த ஒரு பங்களா வீட்டில் கேபிள் கனெக்ஷன் கொடுக்கப் போனபோது, அங்கிருந்த சேச்சி, கனெக்ஷன் கொடுக்கணும் என்று ரொம்ப உள்ளே கூட்டிக் கொண்டு போக அரண்டு போய் ஓடி வந்து, சீக்கிரமே வேலையை விட்டு விட்டேன்)

4. 1992 முதல் இன்று வரை வட இந்தியா முதல், மலேசியா வரை பல இடங்களில் எலக்டிரிக்கல் கன்ஸ்ட்ரக்ஷன் துறையில் வாழ்க்கை நடத்துவது!


Four movies I would watch over and over again:

1. சதி லீலாவதி (அட..நம்ம பாலு மகேந்திரா எடுத்ததுங்க!)
2. முதல் மரியாதை
3. தர்மத்தில் தலைவன்
4. தில்லானா மோகனாம்பாள்
(இங்கிலீஷ் படமெல்லாம் நமக்கு அம்புட்டு புரியாதுங்கோ...)


Four places I have lived (for years):

1. எண்ணூர் ( கத்திவாக்கம் ரயில் நிலையம் அருகில் )
2. ராயப்பன்பட்டி ( St.Aloysious Hr.Sec.School Hostel )
3. பொள்ளாச்சி ( Nachimuthu Polytecnic - இறந்துபோன லட்சுமனன் காதலித்த அஜிதா நீ எங்க இருக்க?)
4. வாரணாசிக்கு பக்கத்தில் அன்பாரா, மலேசியாவின் காப்பார் மற்றும் 10 வருடத்திற்கு மேலாக சிங்கப்பூர்.


Four TV shows I love to watch:

1. ஹார்ஷா போக்ளே வர்ற show எல்லாம்
2. மெட்டி ஒலி ( முதல் நாள் பார்த்துமே சொன்னேன் - இது நிச்சயம் வெற்றி பெறும்னு! )
3. அது மட்டும் ரகசியம் ( சமீப காலத்தில் ஜவ்வடித்த போதும்.. ரசிக்கிறேன்!)
4. சிங்கப்பூர் வசந்தம் சென்ட்ரலில் தில், தில், மனதில் (படைப்பவர் - சிங்கப்பூர் "ரவி பெர்னாட்" கலைச்செல்வன்)


Four places I have been on vacation:

1. சின்ன வயசில இருந்து அடிக்கடி - சுருளித்தீர்த்தம்
2. மலேசியாவின் பிரேசர் ஹில்
3. அதே மலேசியாவின் பங்கோர் தீவு
4. இந்தோனேசியாவின் பாதாம் தீவு


Four of my favourite foods:

1. அதாங்க .. சிக்கன் பிரியாணி
2. இரவென்றால் - சப்பாத்தி
3. முன்னாடியெல்லாம் இடியாப்பம்... இப்போ புட்டு
4. தக்காளி சாதம்


Four sites I visit daily:

1. www.cricinfo.com
2. http://us.rediff.com
3. www.its.uci.edu/~jaykay/leander.html
4. www.thamizmanam.com


நான் tag செய்ய நினக்கும் 4 பேரை ஏற்கனவே மற்றவர்கள் tag செய்திருக்கக் கூடும் என்பதால், tag செய்வதை தவிர்த்து விடை பெறுவது உங்கள் , உங்கள் , உங்கள் ..........................

Monday, February 27, 2006

விசிட்டிங் கார்டு மாதிரி கவிதை புஸ்தகம் தந்த கதை



சிங்கப்பூர் வரவிருந்த கவிஞர் நா.முத்துக்குமார் பற்றி அறிந்து கொள்வதற்காக அவரது புத்தகங்களை சிங்கப்பூர் நூலகத்தில் இருந்து இரவல் வாங்கி படித்துக் கொண்டிருந்தேன். "நியூட்டனின் மூன்றாவது விதி" என்ற கவிதைத் தொகுப்பின் முன்னுரையில் - நா.முத்துக்குமாரின் முந்தைய தொகுப்பான " பட்டாம் பூச்சி விற்பவனில்" தன்னை பாதித்த வரிகள் என்று கந்தர்வன் கீழ்வரும் வரிகளைக் குறிப்பிட்டிருந்தார்....

"பொண்டாட்டி தாலியை
அடகு வச்சு
புஸ்தகம் போட்டேன்
தாயோளி
விசிட்டிங் கார்டு மாதிரி
ஓசியில் தர வேண்டியிருக்கு "

பட்டென்று நிறுத்தி முகத்தில் அறைந்த வரிகள்.

இதை படித்துவிட்டு வலி தாங்காமல் கந்தர்வன் ஐம்பது ரூபாய் அனுப்பி வைத்தாராம். நானோ "பட்டாம் பூச்சி விற்பவனை" நூலகத்தில் இருந்து எடுத்துப் படிக்கக்கூடாது என்றும், எங்காவது காசு கொடுத்து வாங்கிப்படிக்க வேண்டுமென்று முடிவு செய்து கொண்டேன்.

சிங்கப்பூர் வானொலி 96.8ன் நேர்காணல் முடித்து திரும்பிக் கொண்டிருந்த ஒரு ராத்திரியின் 11 மணியில் அந்தக் கவிதை பற்றி முத்துக்குமாரிடம் கேட்டேன். மெலிதாக சிரித்தபடி பாலச்சந்தர் அதைப் படித்துவிட்டு 500 ரூபாய் அனுப்பி வைத்த கதையைச் சொன்னார்.

புகழ் பெற்ற அவரது "தூர்" கவிதையை அவரது குரலில் கேட்க வாய்த்தது. ஒரு ஆழ் கிணற்றிலிருந்து மேல் எழும்பி வருவது மாதிரியான குரலில் அந்தக் கவிதை சோடியம் விளக்குகளின் ஓட்டதின் மத்தியில் நெஞ்சில் சோகம் அப்பிச் சென்றது.

மறுநாள் சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நடந்த பெரிய கூட்டத்தில் தரமான தமிழ் மற்றும் உலகக் கவிதைகளை அடையாளம் காட்டி அற்புதமாகப் பேசினார் கவிஞர் நா.முத்துக்குமார்.

கூட்ட முடிவில், நண்பர் பனசை நடராஜன் அருகில் வந்து என் காதில் கிசுகிசுத்தார் ...

" நா.முத்துக்குமார் கொண்டு வந்த புஸ்தகமெல்லாம் விற்றுப் போச்சாம். இன்னும் ஏதாவது புஸ்தகம் இருக்கா?"

ஒப்பிடல் மனசு


தூசற்ற விரைவுச்சாலைகளை
விழிநோக்கும் வேளையில் ஏன்
உன் அழகிய கால்களின்
வழுகிய தடங்கள்
அலையுது நெஞ்சில்?

ஒடித்த சோளத்தை
உன் உள்ளங்கைகளில்
நசிய நசுக்கியதும்...
பச்சைப்பால் மணம்போவதற்குள்
புசிக்குமாறு சிணுங்கியதும்...
எழுவதேனோ நினைவுகளில்?

கே.எ·சி கோழியை
குத்தியோ பிளந்தோ
தீவிரமாக தின்று தீர்க்கையில்
எதற்கு இந்த ஞாபகங்கள்?