Sunday, October 30, 2005

போலொரு

தொலைவுகளுக்கப்பால்...
அடிவானின் அடிவயிற்றில்
அருகிருந்த காற்றில் பதுங்கி
எங்கோ இருந்திருக்கிறது.

நெழிவுகளோடும் வளைவுகளோடும்
ஒரு பொழுதின்
திடீர் கணத்தில் வெளிப்பட்ட இசை
புன்னகை இன்பத்தில் புதைத்தது என்னை.

நாட்களில் வாரங்களில்
மேற்பரப்பில் முளைத்து
பனித்துளி சுமந்தேன் நான்.

மதியத்தூக்கத்தின்
எதிர்பாராக் கனவென வருகிறது
எனக்கானதல்ல இசை.
இருந்தாலும் எனக்குமாகிறது...

மனக்கரையின் மணற்பரப்பில்
போகிறது சிரிப்பலைகள்.

No comments: