Sunday, February 19, 2006

வேறானவனின் நாளை

எல்லோரும்
எதிரியாவதும்

எதிர் வருவதெல்லாம்
அன்பாவதும்


கனக்கும் சிறுகற்கள்
கன மலையில்
காற்றாவதும்

முறிந்த சிறகாவதும்
நானே சிறகாவதும்

நேற்று நானானதும்
இன்று வேறானதும்

வேறெது நிகழ்த்தும்
வேர்பிடிக்கும் காதலன்றி?

அல்ல அவளென் காதலி...
என் நாளையின் நம்பிக்கை!

4 comments:

Anonymous said...

:-)

//அல்ல அவளென் காதலி...
என் நாளையின் நம்பிக்கை!//

அழகான வரிகள்!

நேசமுடன்
-நித்தியா

பாலு மணிமாறன் said...

Nandri Nithiyaa!

Chandravathanaa said...

nice

பாலு மணிமாறன் said...

Thankyou Chandravathana!