Saturday, March 18, 2006

சுனாமி ஓசையும், சில கவிதைகளும்

சிப்பிகளும், சிறுநண்டுகளும்
சிறுபிள்ளைகளின்
மணல்வீடுகளும்
இருந்த இடம் எது?

நிலா பார்த்து
இரவு நுழைந்து
பகலில் வெளிவந்த
மணல்பாதை எது?

காலங்களின் ஓட்டத்தில் -
கடற்கரையில்
கரை பார்த்து
நாளாகிறது...

நீர் மூழ்க நிற்கிறது கரை.

ஓசைச் சுனாமியின் ஓலத்தில்
அமிழ்ந்து ஒலிக்கிறது
தமிழ் மூச்சு.

எப்போதேனும்
நீர் மேல் எழும்பி விடும்
நீண்ட மூச்சுக்கள்
மீண்டும் மூழ்கின,
மூச்சுத் திணறின...

மெல்லிய பாடலின்
உள்ளிருந்து ஒலிக்கும்
ஒரு உயிர்க்கவிதை!

(சமீபத்திய தமிழ் திரைப்படப் பாடல்களைக் கேட்கும்போது, இப்படித்தான் வருகிறது பெருமூச்சு! )

No comments: