Tuesday, March 22, 2005

சிங்கப்பூர் இணைய நண்பர்கள் கூட்டத்தில் நான் கொறித்தவை


துளசிகோபால் 'இலக்கியம் என்றால் என்ன?" என்று ஒரு கேள்வி கேட்டு கூட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டார். அதற்கு ரமேஷ் நீண்ட விளக்கமளித்தார். அந்த விளக்கத்தின் இறுதியில் நான் புரிந்து கொண்டது இதுதான். ' நீங்கள் எழுதுவதெல்லாம் இலக்கியமென்று நினைத்துக்கொண்டு இருந்து விடாதீர்கள். அதே சமயம், உங்கள் எழுத்தை யாராவது இலக்கியமில்லை என்று சொன்னால் துவண்டு விடாதீர்கள்."

யோசித்துப்பார்த்தால், வாசித்த எழுத்தை ஓரிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னும் கூட ஞாபகம் வைத்துக்கொள்ள முடிந்தால், வாசித்தபோது நிகழ்ந்த சிலிர்ப்பை, பரவசத்தை, சோகத்தை, கோபத்தை, தவிப்பை, இன்னுமொரு சந்தர்ப்பத்தில் நினைவூட்ட முடிந்தால் - அது நல்ல எழுத்து, நல்ல இலக்கியம் என்று தோன்றுகிறது. வாழ்க்கையை வெகு எளிமையாகச் சொன்ன இரு வரிகள் ஞாபகத்தில் வருகிறது..." பொழுது மலச்சிக்கல் இல்லாமல் விடிகிறதா? பொழுது மனச்சிக்கல் இல்லாமல் முடிகிறதா?" - சொன்னது ' வடுகபட்டி பாட்டி'

நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு நண்பர் ட்டய்லெட்டைத் தேட, இன்னொருவர் இருளில் இருந்த ஒரு குட்டி கட்டிடத்தைச் சுட்ட, கடைசியாக ஒருவர் சொன்னார், " வாழ்க்கைன்னா அதில் ஒரு தேடல் இருக்கனுங்க" அதானே...!

இந்த சந்திப்பில் ரமேஷின் ஓவியங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. " ராக்கம்மா கையைத் தட்டு பாட்டின் துவக்கத்தில் ஒரு வயலின் பிட் வரும். அதை எடுத்துவிட்டாலும் பாட்டு பாட்டுதான். ஆனால், அதில் ஒரு முழுமை உணர்வு இருக்காது. அப்படி விடுபடாத முழுமை உணர்வைத் தருவதுதான் ஓவியம்" என்றார் ரமேஷ். கூடவே - ஒரு அழகான, (ஜெயந்தி சங்கருக்கு மிகவும் பிடித்திருந்த) 'மீரா' ஓவியத்தை துளசி கோபாலுக்கு பரிசுமளித்தார்.

உங்கள் எழுத்தின் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நிச்சயம் ஒருநாள் அது அம்பலமேறும் என்ற ரம்யா நாகேஸ்வரனின் கருத்து யோசிக்க வைத்தது.

துளசிதளத்தின் பின்னூட்டத்தில் சொன்ன மாதிரி, தொடர்ந்து சாப்பிட்டு ஆதரவு தந்தது நான்தான்.நாலு ரவுண்ட் கேசரி, மூணு ரவுண்ட் கேக், தலா ரெண்டு பெக் ஆரஞ்சு + 7up , கடைசியா ஒரு பெக் டீ....கிறுகிறுத்துப் போச்சு...

அன்பு, இந்தியாவிலிருந்து புதிதாக சில புத்தகங்கள் வந்திருப்பதாகவும், ஆனால் தன் துணைவியார் ' பழைய புத்தகங்கள் வெளியே போனால்தான், புது புத்தகங்களுக்கு வீட்டுக்குள் இடம் என்று சொல்லி விட்டதால், வந்த புத்தகங்களை மற்றவர்களுக்கு வாசிக்கத் தருவதாகச் சொன்னார். சிலர் ' அதனாலென்ன... நாங்கள் permanentஆ எங்கள் வீட்டில் வைத்து ஆதரிக்கிறோம்' என்று பெரிய மனதோடு சொல்ல, அன்பு அன்பாக ( ? ) சிரித்தார்.

ரமேஷின் அனுபவம் வேறு மாதிரியாம். அவர் சமீபத்தில் ஒரு புத்தகம் வாங்கினாராம்.அவர் வீட்டுக்குப் போன எம்.கே.குமார், அதை புரட்ட்ப் பார்த்து விட்டு, ' அட.. இந்தப் புத்தகத்துக்கு போயா இந்த விலை' என்று போட்டுத்தாக்க, இதுபோன்ற money mattersஐ sharpaaக கவனித்துவிடும் தனது மனைவி தன்னை தாளித்து விட்டதாக சொல்லி சிரித்தார். ' ஏதோ என்னாலான உதவி ' என்று சொல்லி வீரப்பா சாயலில் சிரித்தார் குமார்.

தமிழில் மொழி பெயர்ப்புகளைப் பற்றி நீண்ட நேரம் பேசிய ஈழநாதனும், ரமேஷிம் கடைசியில், என்னிடம் மொழிபெயர்ப்புகளைப் பற்றி கேட்டு வைக்க, ' சா.கந்தசாமி...சாகித்திய அகாதமி...நவீனத்தமிழ் சிறுகதைகள்...அது இது'வென்று தத்து பித்தினேன். ஆனாலும் திரு.சா.கந்தசாமி அவர்கள் இதுவரை ஏதும் மொழிபெயர்க்காமல் இருந்தால் immediateடாக ஏதேனும் மொழி பெயர்த்து என்னை காப்பாற்றுமாறு இந்தப் பதிவின் மூலம் கேட்டுக் கொள்கிறேன்.

ரமேஷின் பேச்சு, காலச்சுவட்டில் விமர்சனக் கட்டுரை படிக்கிற உணர்வை ஏற்படுத்திக்கொண்டே இருந்தது. இனிமேல் அவர் நிறைய எழுதக்கூடும்.

'இலக்கியம் என்றால் என்ன' என்று கேட்ட துளசியக்கா, அருள்குமரன் கைதொலைபேசியில் புகைப்படம் எடுத்தபோது அடக்கமாக போஸ் கொடுத்த துளசியக்கா...ம்ம்ம்...அவருக்கும் அவரது எழுத்துக்கும் அதிக வித்யாசமில்லை. இரண்டுமே இயல்பானவை, வெள்ளேந்தியானவை...

3 comments:

Vijayakumar said...

//நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு நண்பர் ட்டய்லெட்டைத் தேட, இன்னொருவர் இருளில் இருந்த ஒரு குட்டி கட்டிடத்தைச் சுட்ட, கடைசியாக ஒருவர் சொன்னார், " வாழ்க்கைன்னா அதில் ஒரு தேடல் இருக்கனுங்க" அதானே...!//

நச்

Anonymous said...

¿¢¨È ¿î ¦ºýÈ À¾¢×¸û!
ÒШÁô À¢ò¾ý ¾ý¨É "ºÃŠÅ¾¢ Àò¾¢Ã¢ì¨¸Â¢ý ¬º¢Ã¢Âý" ±ýÈ «¨¼¦Á¡Æ¢Â¢ðÎ ¸¢ñ¼ÄÊôÀ¡÷¸û ±ýÚ ´Õ Óýۨâø ÌÈ¢ôÀ¢ðÊÕó¾¡÷.çÁ„¢ý §ÀîÍ ¸¡ÄîÍÅÎ ¸ðΨè ¿¢¨É×ÀÎòÐÅÐõ «§¾ §À¡Äò¾¡É¡!

«Æ¸¡É À¾¢×.Å¡úòиû

Á¡É…¡-¦ƒý

எம்.கே.குமார் said...

கேசரியும் நல்லா இருந்துச்சில்ல. உங்க கொறுக்ஸ்- நறுக்ஸ்!

வெள்ளந்தியாத்தான் நானும் சிரிச்சேன், 'மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி' சிரிப்புன்னு சொல்லிப்புட்டியளே மக்கா!

நன்றாக நச்சுன்னு இருக்கு தலீவரே!

எம்.கே.