சாமிகிட்ட கேட்பதற்கு எத்தனையோ வரங்கள் நினைப்பில். எல்லா வரமும் தருமா சாமி? தெரியவில்லை. குறைந்தபட்சம் இதைத் தந்தாலாவது தேவலை...!!!
சாமி...
வேலை அவசரத்தில் சிகப்பு சிக்னல் பரிதவிப்பில் பச்சை விளக்குக்கு பதற்றமாய் பார்த்திருக்க.... வயிற்றுப் பிழைப்புக்கு முகம் முன்னே கரம் நீட்டும் குருட்டு மனிதனின் இருட்டுக்குள் கரையாமல் மறையாமல் ஏதேனும் ஈகின்ற இளகிய மனம் எனக்குத்தா!
அருமையான கவிதை... அது சரி ஏன் கவிதைகளுக்கு யாரும் பின்னூட்டம் இடவில்லை, கட்டுரைகளுக்கு அளிக்கப்படும் முக்கியதுவம் கவிதைகளுக்கு தரப்படவில்லை என எண்ணுகிறேன்
//அது சரி ஏன் கவிதைகளுக்கு யாரும் பின்னூட்டம் இடவில்லை, கட்டுரைகளுக்கு அளிக்கப்படும் முக்கியதுவம் கவிதைகளுக்கு தரப்படவில்லை என எண்ணுகிறேன் //
குழலி, தப்பு தப்பு. எல்லா கட்டுரைகளுக்கும் முக்கியதுவமும் தரப்படுவதில்லையே. சூடான நிகழ்கால அரசியல்,சமூக, சினிமா மேட்டர் உள்ள கட்டுரைகளுக்கு மட்டுமே அந்த ஆதரவு. :-) அப்பப்போ யாரவது நல்ல கட்டுரைய கண்டுக்குவாங்க அவ்வளவு தான். கவிதைன்னா சொல்லவே வேண்டாம். கவிதையில கொஞ்சம் விலைமகள் பெண்களை பத்தி இருந்தா நல்ல கவிதைன்னு சொல்லுவாங்க. அவ்வளவு தான். மத்த கவிதைகளை ஒன்னு இல்ல இரண்டு பேர் தான் கண்டுக்குவாங்க.
நண்பர்கள் சற்று தாமதமான பதிலுக்கு மன்னிக்கனும்..( மன்னிப்பவர்கள்தானே நண்பர்கள்? :))) )
பனசை நடராஜன், சுப்ரமணியம் ரமேஷ், வீ.எம், karthikramas, இன்னொரு பாலு எல்லோருக்கும் என் நன்றியும் அன்பும்!
நிச்சயம் நீங்கள் சொன்னபடி நிறைய எழுதுகிறேன் ரம்யா...நெகிழும்போதுதான் கவிதை பிறக்கிறது, அது மனிதநேயத்தை மனதில் விதைக்கிறது. உங்கள் அன்பு பாராட்டுக்கு நாந்தான் நன்றி சொல்லனுங்க மூர்த்தி, நன்றி! இன்றைய "வேகவேக" உலகில் "குறைந்தபட்ச" மனிதநேயம் என்ற கான்செப்டில் எனக்கு மிகுந்த நம்பிக்கையுண்டுங்க அன்பு.. அதைத்தான் இங்கு பிரதிபலித்திருக்கிறேன்...
நல்லா இருக்கேங்க அன்பு, நேரம் கிடைக்கும்போது முடிந்ததை செஞ்சுக்கிட்டு இருக்கேன்.. கவிமாலை சிறப்பாக இருந்தது. மணவை முஸ்தபா அவர்களில் நேர்மையான பேச்சும், கணையாழி விருது பெற்ற ஜே.எம்.சாலியின் எளிமையும் இன்னும் மனதில் நிழலாடிக்கொண்டே இருக்கிறது.கவிமாலையின் அத்தனை சிறப்புக்கும் காரணம் பிச்சினிக்காடு இளங்கோ என்ற தனி மனிதர்தான்.. மற்றவர்கள் இயன்ற உதவியை அவருக்கு செய்துகொண்டிருக்கிறோம்...சீக்கிரமே உங்களை சந்திக்கப்போகிறேன் என்று பட்சி சொல்கிறது...பார்ப்போம்!
13 comments:
அருமையான கவிதை... அது சரி ஏன் கவிதைகளுக்கு யாரும் பின்னூட்டம் இடவில்லை, கட்டுரைகளுக்கு அளிக்கப்படும் முக்கியதுவம் கவிதைகளுக்கு தரப்படவில்லை என எண்ணுகிறேன்
unngal commentuku nandri-- kuzhali
//அது சரி ஏன் கவிதைகளுக்கு யாரும் பின்னூட்டம் இடவில்லை, கட்டுரைகளுக்கு அளிக்கப்படும் முக்கியதுவம் கவிதைகளுக்கு தரப்படவில்லை என எண்ணுகிறேன் //
குழலி, தப்பு தப்பு. எல்லா கட்டுரைகளுக்கும் முக்கியதுவமும் தரப்படுவதில்லையே. சூடான நிகழ்கால அரசியல்,சமூக, சினிமா மேட்டர் உள்ள கட்டுரைகளுக்கு மட்டுமே அந்த ஆதரவு. :-) அப்பப்போ யாரவது நல்ல கட்டுரைய கண்டுக்குவாங்க அவ்வளவு தான். கவிதைன்னா சொல்லவே வேண்டாம். கவிதையில கொஞ்சம் விலைமகள் பெண்களை பத்தி இருந்தா நல்ல கவிதைன்னு சொல்லுவாங்க. அவ்வளவு தான். மத்த கவிதைகளை ஒன்னு இல்ல இரண்டு பேர் தான் கண்டுக்குவாங்க.
பாலு, எனக்கு பிடிச்சிருக்கு கவிதை.
பொதுவாகவே கவிதைகளை " அட! " என்று லேசாக வியப்பதோடு நின்று விடுகிறது மனது.கட்டுரைகளோடோ உடன்படவோ, மறுக்கவோ செய்கிறது...உடன்படும்போதும், மறுக்கும்போதும், பின்னூட்டங்கள் வருவது இயல்புதானே?
:)))
அருமையான கவிதை!!
நல்ல கவிதை பாலு வாழ்த்துகள்- நிறைய எழுதுங்கள்.
மானஸாஜென்
நல்ல கவிதை பாலு வாழ்த்துகள்
//குருட்டு மனிதனின் இருட்டுக்குள்
கரையாமல் மறையாமல் //
nalla vari
Dear Mr.Balu,how are you? I'm also Pattukkottai-Balu
Your URL page is very super
http://balutech.blogspot.com/
Thanks & b.rgds
Balu
மனதைத் தொடும் கவிதை பாலு. கவிதைக்கேற்ற படங்கள் மேலும் மெருகூட்டுகிறது.
டைரியைப் பற்றிய கவிதையும் (முக்கியமாக அறிமுக வரிகள்) அருமையாக இருக்கிறது.
நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
அன்புடன்,
ரம்யா
நெகிழ்வைத்தந்த கவிதை. அன்றாடம் ஆயிரம் காட்சிகள் எனினும் இதுபோன்ற மனதைத் தைக்கக்கூடிய காட்சியைக் கவிதையாக்கிய பாலு அவர்களுக்கு நன்றி.
அருமையான கவிதை பாலு.
கவிதைக்கும் மேலாக உங்கள் மனிதநேயம் - குறைந்தபட்சம் செய்யவேண்டும் என்ற உணர்வு பாராட்டத்தக்கது.
அப்புறம் நல்லாருக்கீங்களா பாலு!? இப்பல்லாம் உங்களைப்பற்றி விஷயங்களை தமிழ்முரசில் படித்து தெரிந்துகொள்கிறேன்:).
கடந்தமாத கவிமாலை மிகச்சிறப்பாக, புதுமையாக படைக்கப்பட்டதாக முரசில் படித்தேன், பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
நண்பர்கள் சற்று தாமதமான பதிலுக்கு மன்னிக்கனும்..( மன்னிப்பவர்கள்தானே நண்பர்கள்? :))) )
பனசை நடராஜன், சுப்ரமணியம் ரமேஷ், வீ.எம், karthikramas, இன்னொரு பாலு எல்லோருக்கும் என் நன்றியும் அன்பும்!
நிச்சயம் நீங்கள் சொன்னபடி நிறைய எழுதுகிறேன் ரம்யா...நெகிழும்போதுதான் கவிதை பிறக்கிறது, அது மனிதநேயத்தை மனதில் விதைக்கிறது. உங்கள் அன்பு பாராட்டுக்கு நாந்தான் நன்றி சொல்லனுங்க மூர்த்தி, நன்றி! இன்றைய "வேகவேக" உலகில் "குறைந்தபட்ச" மனிதநேயம் என்ற கான்செப்டில் எனக்கு மிகுந்த நம்பிக்கையுண்டுங்க அன்பு.. அதைத்தான் இங்கு பிரதிபலித்திருக்கிறேன்...
நல்லா இருக்கேங்க அன்பு, நேரம் கிடைக்கும்போது முடிந்ததை செஞ்சுக்கிட்டு இருக்கேன்.. கவிமாலை சிறப்பாக இருந்தது. மணவை முஸ்தபா அவர்களில் நேர்மையான பேச்சும், கணையாழி விருது பெற்ற ஜே.எம்.சாலியின் எளிமையும் இன்னும் மனதில் நிழலாடிக்கொண்டே இருக்கிறது.கவிமாலையின் அத்தனை சிறப்புக்கும் காரணம் பிச்சினிக்காடு இளங்கோ என்ற தனி மனிதர்தான்.. மற்றவர்கள் இயன்ற உதவியை அவருக்கு செய்துகொண்டிருக்கிறோம்...சீக்கிரமே உங்களை சந்திக்கப்போகிறேன் என்று பட்சி சொல்கிறது...பார்ப்போம்!
Post a Comment