Wednesday, January 25, 2006

சுனாமி ஓசையும், சில கவிதைகளும்

சிப்பிகளும், சிறுநண்டுகளும்
சிறுபிள்ளைகளின் மணல்வீடுகளும்
இருந்த இடம் எது?

நிலா பார்த்து இரவு நுழைந்து
பகலில் வெளிவந்த
மணல்பாதை எது?

காலங்களின் ஓட்டத்தில் -

கடற்கரையில்
கரை பார்த்து நாளாகிறது...
நீர் மூழ்க நிற்கிறது கரை.

ஓசைச் சுனாமியின் ஓலத்தில்
அமிழ்ந்து ஒலிக்கிறது
தமிழ் மூச்சு.

எப்போதேனும்
நீர் மேல் எழும்பி விடும்
நீண்ட மூச்சுக்கள்
மீண்டும் மூழ்கின, மூச்சுத் திணறின...

மெல்லிய பாடலின்
உள்ளிருந்து ஒலிக்கும்
ஒரு உயிர்க்கவிதை!

2 comments:

Unknown said...

Nice words put in nice order

பாலு மணிமாறன் said...

நன்றி தேவ்... தொடர்ந்து செய்யும் விமர்சனங்களுக்கு!