Saturday, April 29, 2006

நாலு நாலாய் .. 16

பாதித்த நாலு விஷயங்கள் :

1. 1983 ல் படித்த எம்.எஸ்.உதயமூர்த்தியின் "எண்ணங்கள்"
2. கிரிக்கெட் - அதனால் கெட்டு குட்டிச்சுவரானவர்களில் - நானும் ஒரு சுவர்.
3. எனது கம்பேனியிலிருந்த 149 பேரும் சிங்கப்பூர் கனவில் சுற்றி கொண்டிருக்க, அதைப்பற்றி துளியும் நினைக்காமல் இருந்த 150வது என்னை கூப்பிட்டு சிங்கப்பூர் அனுப்பிய - spic - jel நிறுவன ரவீந்திரன்.
4 . 2000 வருடத்திய சிங்கப்பூர் காலையில் என்னை எழுப்பிய எனது தந்தையின் மரணச்செய்தி.


சமீபத்தில் படித்த நாலு புத்தகங்கள் :

1. கவிஞர் அறிவுமதியின் "நட்புக்காலம்"
2. Infosys நாராயணமூர்த்தி ரூ.10000 ரூ.100000000000 ஆன கதை என்.சொக்கன்
3. கவிஞர் நா.முத்துக்குமாரின் "பாலகாண்டம்"
4. மலேசிய எழுத்தாளர் எம்.ஏ.இளஞ்செல்வனின் "தெருப்புழுதி"


நாழிதழில் படிக்கும் முதல் நாலு விஷயங்கள் :

1. எந்த பத்திரிக்கையானாலும் முதல் மரியாதை க்குத்தான்.
2. அடுத்து பிசினஸ் சமாச்சாரங்கள் ... இப்போதெல்லாம் பிஸினஸ் மேட்டரே சிறுகதை ரேஞ்சில் எழுதுகிறார்கள்.
3. அடுத்து சினிமா, சினிமா! சிம்ரன் அம்மாவான செய்தியை மட்டும் கொஞ்சம் சோகத்தோடு படித்தேன். ஆயிரம் பெண்கள் அம்மாவாகலாம்...ஆனால் " ஆள் தோட்ட பூபதி " ஒரு சிம்ரனால் மட்டும்தானே முடியும்?
4. கடைசியா போனாப்போகுது என்று நம்மூர் அரசியலைப் படிப்பேன். ஏறக்குறைய வாந்தி வந்து விடும் . ஆனால் அவ்வப்போது ஒரே டமாஷாகவும் இருக்கும்.


சிங்கப்பூரில் எனக்குப் பிடித்த நாலு விஷயங்கள் :

1. அழவே அழாத சீனக் குழந்தைகள் ( எங்காவது அழுகை சத்தம் கேட்டால் அநேகமாக அது இந்தியக் குழந்தையாகத்தான் இருக்கும் )
2. நான் Access cardஐ உள்ளே திணித்து கைரேகையை காட்டியதும் கதவு திறந்து "போய் வா மகனே" என்று வழியனுப்பும் immigiration.
3. இணையத்தின் வழி சமர்பிக்க முடிகிற வருமானவரி கணக்கு, விவகாரங்கள் ,etc
4. சிங்கப்பூர் பணத்தில், அரசாங்க தகவல் பறிமாற்றங்களில் அதிகாரப்பூர்வ இடம் பெற்றிருக்கிற "நமது" தமிழ்!!!

4 comments:

ilavanji said...

//. எந்த பத்திரிக்கையானாலும் முதல் மரியாதை க்குத்தான்.//

பாலு.. இந்த வாக்கியத்துல எதையோ காணலை!!

நாங்களே பூர்த்தி செய்துக்கனுமா?? :)

Sivabalan said...

"நமது" தமிழ்!!!

Good!!!

பாலு மணிமாறன் said...

the word "sports" is missing ... sorry ilavanji!!!!

பாலு மணிமாறன் said...

Nandrikal Siva !