Thursday, April 21, 2005

எழுத ஏதுமில்லை

இரவுக்கு வெளிச்சம் தருவது நிலவு மட்டுமா....உறவுகளும் ஒளியூட்டலாம் நடந்து!

Image hosted by Photobucket.com

நேற்றிரவு பூங்கா....
நட்சத்திரங்கள், நான்
நிறையாத இருள்
விழி வருட நிலா
மனம் வருட அவள்..!

முடிந்து போயின வருடங்கள்....
கடந்தகால அவளை
கவிதையாக்கும் உத்தேசம்!

இறந்த காதலுக்கு
எதற்கு இனிக் கவிதை...
வருடம் ஒருமுறை வரும்
திவசமா அது?
யோசிக்கிறேன்.

இல்லாமல் போவது இறப்பு.
என்னிலிருந்து அவள்
இல்லாமல் போனதுண்டா?

நிலவில் நிலைக்குத்தும் விழிகள்
நடந்து நடந்து யோசிக்கும் மனம்.

எதுவும் எழுதாமல்
எழுந்து நடக்கின்றேன்...
நிழலோடு நடந்தது வெளிச்சம்!


No comments: