Friday, April 22, 2005

வார்த்தைச்சித்தரின் வார்த்தை விளையாட்டு

சுகிசிவம் தனது சமீபத்திய சன் டி.வி பேச்சில் - மருதூர் அரங்கராசன் அவர்கள் "ஒற்றுப்பிழையில்லாமல் தமிழ் எழுதுவது எப்படி" என விரிவாக எழுதியிருக்கும் இலக்கண நூலைப்பற்றி குறிப்பிட்டார்.

அந்தச்செய்தி - 1980களின் இறுதியில் சென்னை, புரசைவாக்கம், சர்.முத்தையாச் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் மருதூர் அரங்கராசன் அவர்களிடம் நான் தமிழ் மாணவனாக இருந்தபோது நடந்த ஒரு சுவையான நிகழ்ச்சியை ஞாபகப்படுத்தியது.

எங்கள் பள்ளிக்கு ஒருமுறை வார்த்தைச்சித்தர் வலம்புரிஜான் பேச வந்திருந்தார். அவர் "தாய்" வார இதழின் ஆசிரியராக இருந்த சமயம் அது. எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் கண்டிப்பானவர். எந்த ஊரில் அல்லது பள்ளியில் கண்டிப்பான தலைமையாசிரியரை மாணவர்கள் விரும்பியிருக்கிறார்கள்?

வலம்புரிஜானை அறிமுகப்படுத்திப் பேசிய தலைமை ஆசிரியர், அவரை " தாய்க்குத் தாய் " என்று பாராட்டாகச் சொல்லிவைக்க, அடுத்து பேசவந்த வலம்புரிஜான் " உங்கள் தலைமையாசிரியர் மிகவும் நாகரிகமானவர். எங்கே என்னை ஒரு பாட்டி அளவிற்கு வயதானவன் என்று சொன்னால் நான் மனம் வருந்தப்பட்டு விடுவேனோ என்று எண்ணி, "தாய்க்குத் தாய்" என்று நாசுக்காக அழைக்கிறார். அப்படியென்றால் அவர் நாகரிகமானவர்தானே?" என்று பேசி ஒரே வாராக வார...

மாணவர்கள் அடைந்தது - ஆனந்தம். தலைமையாசிரியர் முகத்தில் வழிந்தது - ......... ( அதை நீங்களே யூகிச்சுக்கங்க ! )

No comments: