எல்லாம் மங்கலாகத்தான் ஞாபகம் இருக்கிறது. சுப்ரமண்ய ராஜூவின் கதைகள். ஏறக்குறைய 20 - 25 வருடங்களுக்கு முன்பு வாசித்தது. அதை வாசித்தது கம்பத்து தாத்தா வீட்டில். கம்பத்திலிருந்து உத்தமபாளையம் போகும் வழியில் தோட்டத்திற்கு மத்தியில் இருக்கிறது தாத்தா வீடு. அந்தத் தோட்டத்தில் வாழை, கரும்பு, சோளம் என்று காலத்திற்கேற்ப பயிர் செய்யப்படும். தோட்ட மத்தியில் அகன்ற, ஆழமான கிணறு உண்டு. நாலைந்து மாமாமார்களும் உண்டு. மதுரை பாஷையில் சொல்வதென்றால் - ஒவ்வொருத்தரும் பாசக்கார பயலுவ.
தனஷ்கோடி மாமா புத்தகங்களை பைண்டு செய்வதில் வல்லவர். அவர் பைண்டு செய்து வைத்திருந்த சாண்டில்யன், கல்கி போன்றவர்களின் புத்தகங்கள் அறிமுகம் செய்த உலகத்தை தோட்டத்து வரப்புகளில் உட்கார்ந்தபடி, காக்காய்களின் இடைவெளிவிட்ட கரைதல் களுக்கிடையில் படிப்பது சுகமான அனுபவமாக இருந்தது. கடலில் பாய்மரக் கப்பல்களில் பயணிப்பதும், எதிரிகளிடம் வாளைச் சுழற்றுவதும், இளவரசியின் வனப்பை தீப்பந்த வெளிச்சத்தில் பார்த்து பிரமிப்பதும் சாத்தியமானது. தனஷ்கோடி மாமாவின் கால் சற்று ஊனம். தாங்கித் தாங்கிதான் நடப்பார். அவ்வப்போது வலிப்பு வருமென்று சொல்வார்கள். நான் பார்த்ததில்லை. ஒருநாள் தனுஷ்கோடி மாமா கிணற்றில் விழுந்து இறந்து போனார். யாருமற்ற ஒரு வெயில் நாளில் கிணற்றருகில் நின்று கொண்டிருந்தபோது, வலிப்பு வர, உள்ளே விழுந்தவர் காப்பாற்ற ஆளின்றி இறந்து விட்டாரென்று சொன்னார்கள். அவரது மரணத்தை விட, அந்த மரணம் நேர்ந்த விதம் நீண்டநாள் வலித்தது.
அவரது மரணத்திற்குப்பின் ஒரு விடுமுறை நாளில் அவரது பெட்டியை குடைந்து கொண்டிருந்தபோதுதான் சுப்ரமண்ய ராஜுவின் சிறுகதைத் தொகுப்பு கிடைத்தது. சாண்டில்யன், கல்கி போன்றவர்களின் புத்தகத்திற்கிடையில் அது எப்படி வந்தது அல்லது ஏன் வந்தது என்ற கேள்வி அந்தக் கதைகளில் பயணித்த தருணங்களின் எழுந்து கொண்டே இருந்ததது. அது வேறு உலகம். சந்தன வாசனையும், வியர்வை வாசனையும் சமவிகிதத்தில் கலந்து நம்மை தொடர்ந்து கொண்டே இருக்கும் உலகம். நுணுக்கங்களும், நுணுக்க மீறகளை அனுமதிக்கும் விதிகளும் நிறைந்த உலகம். அதை தனுஷ்கோடி மாமா படித்திருப்பாரா என்று வெகுநாட்களாக யோசித்துக் கொண்டிருந்தேன்.
அதேபோல் - வெகுநாட்களுக்குப் பிறகுதான் தெரிந்து கொண்டேன், சுப்ரமண்ய ராஜூவும் ஒரு ஸ்கூட்டர் விபத்தில் இளம் வயதிலேயே இறந்து விட்டாரென்று.
Friday, December 05, 2008
Thursday, December 04, 2008
ஜொலிப்பார்களா தமிழக கிரிக்கெட் வீரர்கள்? (நாலு வார்த்தை-003)
தமிழக கிரிக்கெட் வீரர்களை துரதிர்ஷ்டம் பல வடிவங்களில் தொடர்ந்து துரத்திக் கொண்டே இருப்பது காலகாலமாக நடந்து வருகிறது. சமீபத்திய உதாரணம் சுப்ரமணியன் பத்ரிநாத். வெங்கட்ராகவனும், ஸ்ரீகாந்தும் அதற்கு விதிவிலக்கு. ஓரிரு ஒருநாள் விளையாட்டுப் போட்டிகளோடு பத்ரிநாத் ஓரம் கட்டப் பட்டிருப்பதை துரதிர்ஷ்டம் என்று சொல்லாமல், வேறெப்படிச் சொல்ல? எதிர்வரும் இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் யுவராஜ் விளையாடக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஸ்ரீனிவாசன், எல்.சிவராமக்கிருஷ்ணன், டபிள்யூ.வி.ராமன், வெங்கட்ரமணா, படானி என, ஓரிரு போட்டிகளோடு சரித்திரமாகிவிட்ட தமிழக வீரர்களின் பட்டியல் வெகு நீளமானது.
சமீபத்திய வரவுகளான தினேஷ் கார்த்திக்கும், முரளி விஜய்யும் இன்னும் பல வருடங்களுக்கு விளையாடக் கூடும். தினேஷ் கார்த்திக்கிற்கு நிறைய வாய்ப்புகள் வழங்கப்பட்ட போதும், அதை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது உண்மை. அவருக்கு இன்னும் வயது இருக்கிறது. பார்க்கலாம் - இனிமேல் கிடைக்கும் வாய்ப்புகளை என்ன செய்கிறார் என்று. முதுகு சார்ந்த பிரச்ச்னைகளில் இருந்து மீண்டு வந்திருக்கும் பாலாஜியின் சமீபகால பந்து வீச்சு பரவசமளிக்கிறது. இப்படியே பந்து வீசினார் என்றால், சீக்கிரமே அவரை இந்திய அணியில் பார்க்க முடியும்.
தற்போது தமிழக ரஞ்சி அணியில் விளையாடுபவர்களில் 18 வயது துவக்க ஆட்டக்காரர் அபினவ் முகுந்திற்கும், வலது கை சுழல்பந்து வீச்சாளர் அஷ்வினிற்கும் நல்ல எதிர்காலம் இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் ஜோசியம் சொல்கிறார்கள். டபிள்யூ.வி.ராமன் தற்போது தமிழக அணியின் கோச்சாக இருக்கிறார். அவர் புத்திசாலி. இடது கை பந்து வீச்சாளராக கிரிக்கெட் வாழ்க்கையைத் துவங்கி, துவக்க ஆட்டக்காரராகத் தன்னை உருமாற்றிக் கொண்டவர். ரஞ்சிக் கோப்பையை வெல்லக் கூடிய அணியாக தமிழக அணியை அவர் உருமாற்றுவாரா? Keep Watching!
சமீபத்திய வரவுகளான தினேஷ் கார்த்திக்கும், முரளி விஜய்யும் இன்னும் பல வருடங்களுக்கு விளையாடக் கூடும். தினேஷ் கார்த்திக்கிற்கு நிறைய வாய்ப்புகள் வழங்கப்பட்ட போதும், அதை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது உண்மை. அவருக்கு இன்னும் வயது இருக்கிறது. பார்க்கலாம் - இனிமேல் கிடைக்கும் வாய்ப்புகளை என்ன செய்கிறார் என்று. முதுகு சார்ந்த பிரச்ச்னைகளில் இருந்து மீண்டு வந்திருக்கும் பாலாஜியின் சமீபகால பந்து வீச்சு பரவசமளிக்கிறது. இப்படியே பந்து வீசினார் என்றால், சீக்கிரமே அவரை இந்திய அணியில் பார்க்க முடியும்.
தற்போது தமிழக ரஞ்சி அணியில் விளையாடுபவர்களில் 18 வயது துவக்க ஆட்டக்காரர் அபினவ் முகுந்திற்கும், வலது கை சுழல்பந்து வீச்சாளர் அஷ்வினிற்கும் நல்ல எதிர்காலம் இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் ஜோசியம் சொல்கிறார்கள். டபிள்யூ.வி.ராமன் தற்போது தமிழக அணியின் கோச்சாக இருக்கிறார். அவர் புத்திசாலி. இடது கை பந்து வீச்சாளராக கிரிக்கெட் வாழ்க்கையைத் துவங்கி, துவக்க ஆட்டக்காரராகத் தன்னை உருமாற்றிக் கொண்டவர். ரஞ்சிக் கோப்பையை வெல்லக் கூடிய அணியாக தமிழக அணியை அவர் உருமாற்றுவாரா? Keep Watching!
மலேசிய மக்கள்ஓசையின் முன்னாள் ஆசிரியர் திரு.குரு (நாலு வார்த்தை-002)
திரு.குருசாமியை எப்போது முதல்முதலாக சந்தித்தேன் என்று ஞாபகமில்லை. சந்தித்தேன். பழகினேன். இருந்த அவர் இல்லாமல் போன வருத்தங்களோடு இந்த வரிகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். குருசாமி - மலேசிய வாரஇதழ்களான "வானம்பாடி" "மக்கள் ஓசை" போன்றவற்றின் முன்னாள் ஆசிரியர். சில மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். சிலர், சில நீக்க முடியாத பிம்பங்களை நம்முள் விட்டுச் செல்வார்கள். அந்த வகையில், குறும்புத்தனம் கலந்த அவரது புன்னகை இன்னும் என்னுள் இருக்கிறது ; இனியும் இருக்கும். அவர் மக்கள் ஓசையில் பணியாற்றிய காலத்தில் எனக்கு "வாரம் ஒரு இளமைக்கதை" எழுதும் வாய்ப்பை வழங்கினார். 15 வாரங்கள் போன அந்த இளமைத் தொடர் "அப்பாவிச் சோழன்" என்ற புனைப்பெயருக்கு மலேசியத் தமிழ் வாசகர்களிடம் பரவலான பார்வையைப் பெற்றுத்தந்தது.
குருசாமி - எழுத்தாளர்களுக்கு வரம்பில்லா சுதந்திரத்தைத் தந்தவர்; வாசகர் கடிதங்களை இலக்கிய தரத்துக்கு உயர்த்தியவர்; எங்கேயும், எப்போதும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாதவர்; வார்த்தைகள் காயப்படக் கூடாது என்ற கவலைப் பட வைக்கும் தொனியில் பேசுபவர். வழுக்கையில் அவரளவு அழகாக இருந்த வேறு ஒரு ஆண்மகனை நான் இதுவரை சந்திக்கவில்லை. அவரது நகைச்சுவை உணர்வு மிகவும் பிரசித்தம். உதாரணத்திற்கு ஒன்று.
1996ம் வருட ஜூன் மாத மலேசியச் சிறுகதைத் திறனாய்வை காப்பாரில் நானும், நண்பர் தண்ணீர்மலையும் ஏற்பாடு செய்திருந்தோம். ஆதிகுமணன் தலைமை தாங்கினார். பல எழுத்தாளர்கள் ஆர்வமாகக் கலந்து கொண்டார்கள். எழுத்தாளர் பீர்முகமதைக் கிண்டலடிப்பதென்றால் குருசாமிக்கு அவ்வளவு ஆசை. குருசாமி மைக்கைப் பிடித்ததும், எதிர்பார்த்தது போலவே அங்கிருந்த சை.பீர்முகமதைப் பற்றி பேசத்துவங்கினார். "ஒரு முறை பீர்முகமது தனது நண்பரைப் பார்க்கப் போனார். அவர்கள் பேசத் துவங்கினார்கள். பீர்முகமது அவரது நண்பரை வாயைத் திறக்க விடவே இல்லை. தானே பேசிக் கொண்டிருந்தார். 'நான் அதை செய்தேன். இதை செய்தேன்' என்று தன்னைப் பற்றியே மணிக்கனக்கில் பேசி நண்பரை தாளித்து விட்டார். பொறுமை இழந்து நண்பர் நெழியத் துவங்கினார். அதைப் பார்த்த பீர் அவரிடம் "ஸாரி, நானே தொடந்து பேசி உங்களை சிரமப்படுத்தி விட்டேன். நீங்கள் வாயைத் திறக்கவே இல்லை. நீங்கள் ஏதாவது பேசுங்கள்" என்று சொல்ல, நண்பர் நிம்மதிப் பெருமூச்சு விட, சை.பீர்முகமது நண்பரிடம் கேட்டாராம், "சரி, சொல்லுங்கள். நீங்கள் என் கதைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?".
இனி யார் செய்வார் சை.பீர்முகமதை இப்படிக் கேலி?
குருசாமி - எழுத்தாளர்களுக்கு வரம்பில்லா சுதந்திரத்தைத் தந்தவர்; வாசகர் கடிதங்களை இலக்கிய தரத்துக்கு உயர்த்தியவர்; எங்கேயும், எப்போதும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாதவர்; வார்த்தைகள் காயப்படக் கூடாது என்ற கவலைப் பட வைக்கும் தொனியில் பேசுபவர். வழுக்கையில் அவரளவு அழகாக இருந்த வேறு ஒரு ஆண்மகனை நான் இதுவரை சந்திக்கவில்லை. அவரது நகைச்சுவை உணர்வு மிகவும் பிரசித்தம். உதாரணத்திற்கு ஒன்று.
1996ம் வருட ஜூன் மாத மலேசியச் சிறுகதைத் திறனாய்வை காப்பாரில் நானும், நண்பர் தண்ணீர்மலையும் ஏற்பாடு செய்திருந்தோம். ஆதிகுமணன் தலைமை தாங்கினார். பல எழுத்தாளர்கள் ஆர்வமாகக் கலந்து கொண்டார்கள். எழுத்தாளர் பீர்முகமதைக் கிண்டலடிப்பதென்றால் குருசாமிக்கு அவ்வளவு ஆசை. குருசாமி மைக்கைப் பிடித்ததும், எதிர்பார்த்தது போலவே அங்கிருந்த சை.பீர்முகமதைப் பற்றி பேசத்துவங்கினார். "ஒரு முறை பீர்முகமது தனது நண்பரைப் பார்க்கப் போனார். அவர்கள் பேசத் துவங்கினார்கள். பீர்முகமது அவரது நண்பரை வாயைத் திறக்க விடவே இல்லை. தானே பேசிக் கொண்டிருந்தார். 'நான் அதை செய்தேன். இதை செய்தேன்' என்று தன்னைப் பற்றியே மணிக்கனக்கில் பேசி நண்பரை தாளித்து விட்டார். பொறுமை இழந்து நண்பர் நெழியத் துவங்கினார். அதைப் பார்த்த பீர் அவரிடம் "ஸாரி, நானே தொடந்து பேசி உங்களை சிரமப்படுத்தி விட்டேன். நீங்கள் வாயைத் திறக்கவே இல்லை. நீங்கள் ஏதாவது பேசுங்கள்" என்று சொல்ல, நண்பர் நிம்மதிப் பெருமூச்சு விட, சை.பீர்முகமது நண்பரிடம் கேட்டாராம், "சரி, சொல்லுங்கள். நீங்கள் என் கதைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?".
இனி யார் செய்வார் சை.பீர்முகமதை இப்படிக் கேலி?
Tuesday, December 02, 2008
அதிகாலை அலாரமாய் சன் டி.வி (நாலு வார்த்தை-001)
ஒவ்வொரு நாள் காலையும், காபி, டீ, இல்லாமல் என்னை எழுப்பும் சன் டி.வியின் பாடல்கள். அலாரம் போல் அவஸ்தை தரும் வஸ்து இல்லை. சத்தம் சற்று அதிகமென்றால் குறைத்துக் கொள்ளலாம். முற்றிலுமாக அணைக்க வேண்டிய அவசியமில்லை. பிடித்த பாடலென்றால், ஊர் உறங்கும் அதிகாலையில், பழைய பாடல்கள் எழுப்பி விடும் பழைய நினைவுகளோடு கண் மூடியபடி நாமும் நடக்கலாம்.
இன்று காலையும் சன் டி.விதான் எழுப்பியது. "தேவதாஸ¤ம் நானும் ஒரு ஜாதிதானடி","குயிலப் புடிச்சு கூண்டிலடச்சு" என்று ஒரு காலத்தில் வானொலியிலும் மனதிலும் பலமுறை ஒலித்த பாடல்கள் வரிசை பிடித்து நின்றன. "மைக்" மோகன் கோலோச்சிய 80களின் ஞாபகங்கள் வந்தன. சன் டி.வியில் போடாத ஒரு பாடலின் ஞாபகமும் கூடவே வந்தது. வந்ததன் காரணம் தெரியவில்லை. அதிகாலை - காரணம் தெரியாத பலவற்றை அசை போட ஏதுவான நேரம். பொள்ளாச்சியும், அங்கு பார்த்த "கடலோரக் கவிதைகள்' படமும், குடையோடு நடந்துபோன ரேகா டீச்சரும், சத்யராஜின் சற்று பெரிய பற்களுக்குப் பின் ஒளிர்ந்த சங்கும், அசை போட வாய்த்தது இன்று.
நாளையும் காலை வரும். சன் டி.வி பாடல்கள் வரும். என்னோடு நடக்கும் நினைவுகளும் உடன் வரும்.
இன்று காலையும் சன் டி.விதான் எழுப்பியது. "தேவதாஸ¤ம் நானும் ஒரு ஜாதிதானடி","குயிலப் புடிச்சு கூண்டிலடச்சு" என்று ஒரு காலத்தில் வானொலியிலும் மனதிலும் பலமுறை ஒலித்த பாடல்கள் வரிசை பிடித்து நின்றன. "மைக்" மோகன் கோலோச்சிய 80களின் ஞாபகங்கள் வந்தன. சன் டி.வியில் போடாத ஒரு பாடலின் ஞாபகமும் கூடவே வந்தது. வந்ததன் காரணம் தெரியவில்லை. அதிகாலை - காரணம் தெரியாத பலவற்றை அசை போட ஏதுவான நேரம். பொள்ளாச்சியும், அங்கு பார்த்த "கடலோரக் கவிதைகள்' படமும், குடையோடு நடந்துபோன ரேகா டீச்சரும், சத்யராஜின் சற்று பெரிய பற்களுக்குப் பின் ஒளிர்ந்த சங்கும், அசை போட வாய்த்தது இன்று.
நாளையும் காலை வரும். சன் டி.வி பாடல்கள் வரும். என்னோடு நடக்கும் நினைவுகளும் உடன் வரும்.
Monday, December 01, 2008
கவிதையை ஒளித்த கைகள்

நடந்து செல்வது சுகம்.
நேசத்திற்குரியவர்களோடு
கைகோர்த்து நடப்பது அதிசுகம்!
வாழ்க்கை நெடுக...
கை கொடுக்கின்றன கைகள்
ஏதோ சில கைகள்
நட்ட மரங்களின் நிழல் மடிதான்
வெயிலுக்கு வேடந்தாங்கலாகின்றன.
ஏதோ சில கைகள்
பம்பாயில் சுட்ட குண்டுகள்தான்
ரத்தம் குடிக்கும் ராட்சசப் பற்களாகின.
தடுமாறும்போது தடுத்துப்பிடிக்க
கரங்கள் இல்லையெனில்
காயப்படும் முகங்கள்.
கொடுப்பதற்கு கைகள் வேண்டும்.
ஏதும் இல்லையெனில்
இரப்பதற்கும் கைகள் வேண்டும்.
புகைப்படம் எடுப்பதற்கும் கைகள்.
சுவரில் புகைப்படமானவர்களுக்கு
மாலை இடுவதற்கும் கைகள்.
மாலை தொடுப்பதற்கும் கைகள்.
மலரைப் பறிப்பதற்கும் கைகள்.
மலர்ச்செடி நடுபவையும் கைகள்.
மண்ணைத் தொடுபவையும் கைகள்.
ஆறடி மண்ணில்
ஆடி அடங்கியவனின் குழியில்
கடைசியாக கைபிடி மண்ணை
இடுபவையும் கைகள்.
கல்லை கடவுளாய் வடிப்பவை கைகள்.
வடித்த கடவுளைத் தொழுபவைக் கைகள்.
அளவுக்கு மீறி சோதிக்கும் கடவுளைத்
தூக்கி எறிவதும் அந்தக் கைகளே.
கற்கள் எப்போதும் தங்களைக்
கடவுளாக்கச் சொன்னதில்லை.
காரிகையாக்கவும் சொன்னதில்லை.
உண்மையில் அவை கைகளின்
கட்டளைக்குக் கட்டுப்படும்
அடிமைகள்...
படிக்கட்டுகளாய்
கால்மிதி படுவதற்கும் சம்மதிக்கும்
கடைநிலை அடிமைகள்.
ஞாபகத்திற்கும் கைகள் உண்டு.
பழைய நினைவுகளை அவை ஓயாமல்
அழித்துக் கொண்டே இருக்கின்றன.
கனவுகளுக்கும் கரங்கள் உண்டு.
சிதறிக் கிடக்கும் பழைய நினைவுகளை
சேகரித்து அவை எரித்துக் கொண்டே
இருக்கின்றன!
எல்லா இடங்களையும் எட்டிப் பார்க்க
எந்தக் கைகளாலும் முடிவதில்லை.
அம்மாவின் கைகளில் குழந்தைக் குளியல்.
மணமாகிவிட்டால் மனைவி கையால்
அக்கறைக் குளியல்.
இடைபட்ட காலத்திலோ...
இடது, வலது - இரண்டு கைகளுக்கும்
எட்டாத இடமாகவே இருக்கிறது
முதுகின் மத்தி!
காதல்வயப்பட்டவர்கள் சொல்லும்
பொய்களையெல்லாம் கவிதையாக
வரிசைப்படுத்தும் வகையிலும்..
காதலில், கைகள் முக்கியம்.
உலகத்தில் ஆகச் சிறந்த கைகள் எவை?
அருசுவை உணவு தரும் அந்தக் கைகளா..
அழுகை துடைக்கும் ஆதரவுக் கைகளா...
உடுக்கை இழக்கையில் ஓடிவரும் கைகளா...
கொடுத்துச் சிவந்த வள்ளலின் கைகளா...
உழுது சிவந்த உழவனின் கைகளா...
உறுபிணி அகற்றும் கருணைக் கைகளா...
பேரிடர் துயரில் உதவும் கைகளா...
இப்படி வரிசை கட்டின கைகள்.
இறுதியில் உணர்ந்தேன்...
தன்னலம் மறந்து, பிறர்நலம் காக்க
பட்டென்று நீள்வது எந்தக் கைகளோ
அந்தக் கைகளே உயர்ந்த கைகள்.
உற்றுப் பார்ப்போம்.
எந்தக் கைகள்.. இந்தக் கைகள்?
Thursday, July 03, 2008
சீக்கிரமே சிங்கப்பூர் வரும் எழுத்தாளர் எஸ்.ராமக்கிருஷ்ணன் சார்ந்து...
சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் "வாசிப்போம்! சிங்கப்பூர் '08" திட்ட அதிகாரி திரு.மணியத்திடமிருந்து இன்றொரு மின்னஞ்சல் வந்தது. எழுத்தாளர் எஸ்.ராமக்கிருஷ்ணன் "வாசிப்போம் சிங்கப்பூர் 2008" சம்பந்தமாக சிங்கப்பூர் வருகிறார் : அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் கீழே குறிப்பிடப்பட்டிருக்கின்றன : அவசியம் கலந்து கொள்ளுங்கள்" என்பதே அதன் சாராம்சம்.
இன்றைய தமிழ் இலக்கிய உலகில் பெரிதாக பெயர் பதித்திருக்கும் எஸ்.ராமக்கிருஷ்ணனைப் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. ஆனந்த விகடனில் வெளிவந்த "கதாவிலாசம்" மூலம்தான் அவரது விலாசத்தைக் கொஞ்சமாவது அறிந்து கொண்டேன்.
பல நல்ல தமிழ் எழுத்தாளர்களைப்பற்றிய குட்டிக்குட்டி அறிமுகங்களோடு ஒரு சினமா டிரைலர் மாதிரி சுவாரஸ்மாக இருந்த தொடர் அது. சினிமா தயாரிப்பதைக் காட்டிலும், அதன் சாரம் பிழிந்து டிரைலர் தயாரிப்பது இன்னும் அதிக சிரமமான வேலையாகத்தான் இருக்க வேண்டும். பொருளாதாரம் சார்ந்த வாழ்க்கையில் இலக்கியத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கும் வாசகனுக்கான A short referesher course மாதிரியும் அது தோன்றியது.
ஒரு வெப்பம் மிகுந்த கோடை நாளில் வீட்டுக் கதவைத் தட்டிய பெண்விற்பனைப் பிரதிநிதியின் வாழ்க்கைச் சோகங்களை அவர் பிரதியெடுத்த விதம் கோடை வியர்வையின் பிசுபிசுப்போடும், ஒரு கோயிலில் யானைக்கு சோறூட்டும் வயதான பெண்மணியின் வாழ்க்கையை அவர் பகிர்ந்து கொண்ட விதம் ஒரு புது மழைக்குப்பின் வரும் மண்வாசனையின் அழுத்தமான நெடியோடும் எனக்குள் பதிந்தது.
ஞாபக மறதிக்காரனான எனக்குள்ளும் சில ஞாபகங்களை விட்டுச் செல்வது ஒரு நல்ல எழுத்தாளனால் மட்டுமே சாத்தியம் என்று எப்போதுமே நம்பிக் கொண்டிருக்கிறேன். எஸ்.ராமக்கிருஷ்ணனின் ஒரு புத்தகமே சில ஞாபங்கங்களை என்னுள் விட்டுச் சென்றிருக்கிறது.
அதற்குப்பின் அவரது எழுத்துக்களை அதிகம் படிக்க வேண்டுமென்ற ஆவல் இருந்தாலும், இன்ன பிற விஷயங்கள் என்னை இழுத்துக்கொள்ள, அவருடைய 2 புத்தகங்களைக்கூட இன்றுவரை நான் முழுமையாகப் படிக்கவில்லை என்ற நிலையில் இப்படி ஒரு அழைப்பு.
நான் மட்டும்தான் இப்படி இருக்க வேண்டும். எஸ்.ராமக்கிருஷ்ணனின் எழுத்துக்களைத் தீவிரமாகத் தேடிப் படிக்கும் ஒரு பெரிய கூட்டம் சிங்கப்பூரில் இருக்கிறது என்பதுதான் உண்மை. ஒரு எழுத்தாளன் தன்னைப் பற்றி, தனது எழுத்துக்களைப்பற்றிப் பேச வரும் ஒரு தளத்தில் அந்த எழுத்தாளனைப் பற்றி ஓரளவு மட்டுமே தெரிந்த, ஓரளவு கூடத் தெரியாத, அல்லது ஒன்றுமே தெரியாத (வாசகர்) கூட்டம் 90 சதவீதம் இருந்து, அவர்கள் மத்தியில் அந்த எழுத்தாளன் பேச நேர்வது துர்பாக்கியம்.அது நிச்சயம் எஸ்.ராமக்கிருஷ்ணனுக்கு நேராது.
கவிஞர் மனுஷ்யபுத்திரனை சிங்கப்பூர் கவிதைப் பயிலரங்கிற்குக் கூட்டிக் கொண்டு வந்தபோது, 'மனுஷ்யபுத்திரனா? அப்படிப்பட்ட பெயரில் ஒரு கவிஞரா?' என்று கேட்ட ஒரு தமிழ் அமைப்பின் முக்கிய உறுப்பினருக்கு மத்தியிலும் மனுஷ்யபுத்திரன் தெளிவாக உரையாற்றினார். நவீனத் தமிழ் இலக்கியம் போகிற திசை பற்றிய அழுத்தமான கருத்துகளை, செய்திகளை முரட்டுதனமிக்க ஆண்மையோடு அவர் சிங்கப்பூர் மண்ணில் விட்டுச் சென்றது இந்த மின்னஞ்சலைப் பார்த்ததும் ஞாபகத்திற்கு வந்தது.
ஆனால் இந்தமுறை, நவீனத் தமிழ் இலக்கியச் சூழலைப் பற்றி அத்தனை ஆவேசத்தோடு சொல்ல வேண்டிய அவசியம் எஸ்.ராமக்கிருஷ்ணனுக்கு இருக்காது என்றே நினைக்கிறேன். மனுஷ்யபுத்திரன் வந்துபோய் இரண்டு, மூன்று ஆண்டுகள் ஆகின்றன. பல அமைப்புகள், குழுக்கள், தனிமனிதர்கள் எடுத்த முயற்சிகளால் நவீனத் தமிழ் இலக்கியதோடு சிங்கப்பூர் வாசகர்களுக்கான பரிட்சயமும், பழக்கமும் அதிகமாகி இருக்கின்றன.
இதையெல்லாம் விட, எஸ்.ராமக்கிருஷ்ணன் சண்டக்கோழி, பீமா போன்ற பிரபலமான வர்த்தகப் படங்களுக்கு வசனம் எழுதியிருப்பதால், அவரை ஒரு நவீனத்தமிழ் எழுத்தாளராகப் பார்த்து பயப்படுவதோ, கூச்சப்படுதலோ, சராசரி வாசகனுக்கு நேர்வது சாத்தியமில்லை என்று சொல்லலாம். அவர் பேசுகிற மொழி நமக்குப் புரியும், அவருக்குப் புரிகிற மொழியில் நம்மால் கேள்வி கேட்க முடியும் என்ற உணர்வே எஸ்.ராமக்கிருஷ்ணனை ஒரு சராசரி வாசகனிடமிருந்து மறைக்கிற மாயத்திரையை எடுத்து விடக்கூடும்.
அதுதான் முக்கியம் - ஒப்பனைகளற்ற, தயக்கங்களற்ற, எதிர்பார்ப்புகளற்ற ஒரு கலந்துரையாடல். எஸ்.ராமக்கிருஷ்ணனிடம் அதை சிங்கப்பூர் வாசகர்கள் நிச்சயம் எதிர்பார்க்கலாம் என்று தோன்றுகிறது.
எஸ்.ராமக்கிருஷ்ணன் சிங்கப்பூர் வர இன்னும் ஒரு வாரம் இருப்பதால், நூலகத்திலிருந்து அவரது நூல்களை இரவல் பெற்று படிப்பதன் மூலம், அறியாதவர்களும் அவரது எழுத்தை அறியலாம். நானும் சில நூல்களைப் படிக்க வேண்டுமென்று முடிவு செய்திருக்கிறேன். முடியவில்லையென்றால், குறைந்தபட்சம், சண்டக்கோழி, பீமா போன்ற படங்களையாவது DVDயில் பார்த்து விடுவேன் என்பது உறுதி.
ஆகவே, சிங்கப்பூர்த் தமிழ் மக்களே... ஜூலை 12, 13ந் தேதிகளில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள். இந்த நிகழ்ச்சிகள் பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் அல்லது விளக்கங்கள் தேவையெனில் தயங்காமல் திரு.மணியத்திடம் 63424416 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். இந்தப் பதிவு பற்றி ஏதேனும் குறைகளோ, நிறைகளோ இருந்தால் அதை நீங்கள் என்னிடம் இந்த நிகழ்ச்சிகளின் போது நேரிலேயே சொல்லி விடலாம். See You all There!
இந்தத் தமிழ் நிகழ்ச்சியைப் பற்றிய ஆங்கில அறிவிப்பைக் கீழே காணலாம்.
In conjunction with READ! Singapore 08, the National Library Board is organising meet-the-author sessions with Mr S. Ramakrishnan, eminent Indian writer and *Tamil film dialogue writer. The National Library Board would like to invite you and your family to attend these sessions:
Saturday July 12, 6.30 -8.00 pm, Multi-Purpose Room, Central Lending Library
Mr S. Ramakrishnan will cover the following topics:
His views on the book and his other works.
His current and future projects.
His views on the book and his other works.
His current and future projects.
Sunday July 13, 4.30 -6.00pm, Programme Zone, Ang Mo Kio Community Library
Mr S. Ramakrishnan will cover the following topics:
How he became a writer.
His love for Tamil.
His role as a dialogue writer in Tamil Cinema.*He worked as a dialogue writer in films like ‘Baba’, ‘Sandakozhi’, and ‘Bheemaa’.
Following his talks there will be Q & A.
How he became a writer.
His love for Tamil.
His role as a dialogue writer in Tamil Cinema.*He worked as a dialogue writer in films like ‘Baba’, ‘Sandakozhi’, and ‘Bheemaa’.
Following his talks there will be Q & A.
Admission is Free. All are Welcome.
If you keen to read his book: the call no is: TAMIL RAM
For information about the author : http://www.sramakrishnan.com/
Saturday, June 28, 2008
"வேறொரு மனவெளி" புத்தகப் பதிப்புரையிலிருந்து ...

சமீபத்தில் சிங்கப்பூர்ப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பான "வேறொரு மனவெளி" சிங்கப்பூரில் இயக்குனர் அமீர் தலைமையில் வெளியீடு கண்டது. அதில் இடம் பெற்ற எனது பதிப்புரை இது:
சிங்கப்பூர் மறு நடவுகள் மிகுந்த மாநகரம்.
இரவு வெற்றாக இருந்த உங்கள் வீட்டு வாசலில், காலை கண்விழிப்பில், சட்டென்று, பூக்களோடு முளைத்து விட்ட புது மரங்களைப் பார்த்து நீங்கள் திகைத்து நிற்பது திகைப்பற்ற வாழ்க்கை முறையாகி விட்டது இங்கு.
இந்த நகரம், வேறு உலகில் முளைவிட்டு வளர்ந்த திறன்மிக்க மனிதர்களையும், தயக்கமின்றி தனது பிள்ளைகளாகத் தத்தெடுத்துக் கொள்கிறது. உலகை ஒரு சிறு கிராமமாக்கிவிடும் எத்தனிப்பில் சிங்கப்பூர் தளராமல் இயங்குவதை அருகிருந்து பார்ப்பவர்கள் உணர முடியும்.அவர்கள் இயல்பாகக் காலூன்றுவதும், வேர்பரப்பிக் கிளை விடுவதும் சிக்கலற்ற வாழ்க்கை நெறியாகி விட்டது.
இலக்கியம் மட்டும் இதன் போக்கிலிருந்து தப்பியா விடும்?
தப்பவில்லை.
இந்த தொகுப்பைப் படித்து முடித்ததும் உங்களுக்குள் அப்படியொன்று தோன்றக்கூடும். தொகுக்கும்போது எனக்கும் தோன்றியது.
வளர்ந்த வாழைமரங்களின் அடியில், அந்த மண்ணின் சத்தை உறுஞ்சி, வளர்ந்து இலை விடும் கன்றுகளை நீங்கள் பார்க்கலாம். அந்த இலைகளை உற்றுப் பாருங்கள். அவை அந்த மண்ணின் வண்ணங்களோடு மிளிர்வது புரியும். இந்தத் தொகுப்பில் அந்த வண்ணங்களோடு நீங்கள் பார்க்கலாம்.
சிங்கப்பூர் வந்திருந்த எழுத்தாளர் பிரபஞ்சனிடம், இருபது பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்களை தொகுக்க இருப்பதாகச் சொன்னதும், "இருபதா?" என்றார்.
எனக்கும் அந்த ஆச்சரியம் இருந்தது.
அந்த இருபது பேரும் தற்போதும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்பது சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய எதிர்காலம் பற்றிய கேள்விகளுக்கு பதிலாகலாம். இன்னும் கூட இருக்கிறார்கள். ஆனால், எங்களின் ஆழ, அகல, தளராத வலைவீச்சில் சிக்கிய மீன்கள் இவ்வளவுதான்.
வெகுசில தரமான கதைகளை மட்டுமே தொகுப்பாக்கி, இங்கிருக்கும் நிலவெளியின் குறுகிய, நிஜமற்றதானதொரு பிம்பத்தை உலமெல்லாம் கொண்டு செல்வதில் உடன்பாடற்ற சிலமனங்களின் சுவாசத்தை இந்த தொகுப்பினூடே நீங்கள் உணர்வீர்கள்.
நாங்கள் இப்படித்தான். இதுதான் எங்கள் முகம். அம்மா, அப்பா, தத்தா, பாட்டி, பேரப்பிள்ளைகள் என எல்லோரும் சேர்ந்தால்தான் குடும்பம் என இவர்கள் உரக்கப் பேசுவது, பெற்றவர்களுக்கு வயதாகி விட்டது என்று ஓய்வு கொடுக்கத் துணியாத ஒரு பாசமிகு பிள்ளையின் மனதை உங்களுக்கு உணர்த்தும்.
கடிதங்கள் குறைந்து விட்ட நவீன வாழ்வில், பேனா முனையால் கிறுக்கி எழுதப்படும் வரிகளுக்குத்தான் நெஞ்சுக்குள் ஈரத்தைக் கசியவிடும் வல்லமை வாய்க்கிறது.
சிங்கப்பூரிலிருந்து உங்களுக்கு வந்த கடிதத்தை உங்கள் அஞ்சல்பெட்டியில் சேர்த்துவிட்ட ஒரு தபால்காரனின் வேலையைத்தான் நான் இங்கு செய்திருக்கிறேன்.
கடிதங்கள் சேர்க்கப்பட வேண்டிய வீடுகள் வீதி நிறைய இன்னும் இருக்கிறன.
என்றும் அன்புடன்
பாலு மணிமாறன்
Thursday, June 21, 2007
கிடைக்கிற வாய்ப்பையெல்லாம் தவறவிட்டு
நழுவிக் கொண்டிருக்கிற வாழ்வின் கவலை
நழுவிக் கொண்டிருக்கிற வாழ்வின் கவலை
திராட்சை ரசமென வடிகிறது
முடிவுறாத பாதையின்
துயர் விளிம்பில் நின்று
இன்னும் கொஞ்சம் சோகம் சிந்தியவேளை
இளமையை கொத்திக் கொத்தித் தின்றன
முக வரிகள்
ஆறுதல்களால் திரும்பப்பெற முடியாததாகவே
இருக்கிற இளமை : முடியுமென்றால்
இருள் சூழ் விந்தென இருக்கக்கூடும்
ஒரு பாத்திரத்தின் உணவெடுத்து
இன்னொன்றுக்கு பிச்சையிடுபவர்களின்
தர்மம் மீதான வருத்தங்களிலிருந்தும்
முடிந்த நிகழ்வுகளினின்று
மீண்டுவிட்ட தெளிவுகளோடும்
நீளும் ஓர் பாதை
எல்லா திசைகளும் கிழக்காவோ மேற்காகவோ
இருத்தல் சாத்தியமற்ற திசைகளின் கரைகளில்
முளைத்து தலையசைக்கும்
நம்பிக்கை நாணல்காடு !
Sunday, June 17, 2007
அப்படி ஒன்றும் மோசமில்லை
இன்னும்
பறவைகளின் கூடுகளுக்கு
மறுப்பு சொல்லுவதில்லை மரங்கள்
எவரும் தம்மை எண்ணிமுடிக்காத
கோபத்தில் உச்சியில் விழுந்த
நட்சத்திரங்கள் உண்டா?
பக்கத்தில் இருப்பவனின்
உறக்கம் கெடுக்காமல் தொலைபேசும்
கருணைக்குரல்கள் காண்பீர் தினம்
எதிர்வரும்போது
அறிமுகமற்றவரிடமும் புன்னகைக்கும்
கிழவிகளற்ற வீதிகள் ஏதும் இல்லை
இருபது வருட பழையவிசிறியின்
விழாத நம்பிக்கை மீது
உறக்கமும் வண்ணக்கனவுகளும்
சாத்தியமாகிறது
தெருப்பூனைகள் யாரோ இடும் உணவில்
வெட்டுண்ட காதின் உயிர்ப்போடு
உலா வருகின்றன
ஒரு கவிதை படிக்கும்
உங்களால் உலகம்
ஒழுங்காகவே இருக்கிறது
Tuesday, June 12, 2007
சிங்கப்பூர்-மலேசிய இலக்கிய நிகழ்வின் புகைப்படங்கள்
( பல மனம், ஒவ்வொன்றிலும் ஓடும் சிந்தனைகளோ ஒவ்வொரு விதம்)
(பச்சைநிற சேலையில் இருப்பவர் : தேசிய நூலக அதிகாரி திருமதி புஷ்பலதா)
(திரு.சை.பீர்முகம்மது - மலேசியாவின் நேற்றைய தமிழ் இலக்கியம்)
(டாக்டர் கிருஷ்ணன் மணியம் - மலேசியாவின் இன்றைய தமிழ் இலக்கியம்)
(திரு.சுப்பிரமணியன் ரமேஷ் - சிங்கப்பூரின் நாளைய தமிழ் இலக்கியம்)
(திரு.வித்யாசாகர்- மலேசியாவின் நாளைய தமிழ் இலக்கியம்)
Subscribe to:
Comments (Atom)